திருக்குறள்

1118.

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி.

திருக்குறள் 1118

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி.

பொருள்:

முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.

மு.வரததாசனார் உரை:

திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

சாலமன் பாப்பையா உரை:

நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.